Thursday, November 15, 2007

தாயுமானவன்....

இது ஆண்களுக்காக....(கவிசிட்டுரை = கவிதை+சின்னக்கட்டுரை)

ஆண் எப்படி பெண்ணாக முடியும்....?
ஆனால் இன்று நீ ஆனாயே...

நான் சோகமானாள்
தோள் கொடுத்து என்னை
ஆதரவாய் அணைக்கின்றாயே...?
என் முடிவருடி தலைகளைக்கும்பொழுது
உன் அன்பின் வெளிப்பாடு புரிகின்றது...

என் கண்ணில் நீர் வழிந்தால்....
உன் நெஞ்சில் குருதி வழிகின்றதே...

நான் தூங்கும்வரை என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கின்றாயே....
நான் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் சமையல் கட்டில் நீ செய்கின்றாயே....?

என் கால்கள் நோ கண்டிட்டவேளையில் இதமாய் வெந்நீர் தடவி நீவிடுகின்றாயே...?

நான் ஆடும் ருத்ரத்திற்கெல்லாம்
அமைதியாய் செவிசாய்க்கின்றாயே...

குழந்தைகளைக் குளிப்பாட்டி சோறூட்டி பாடசாலைக்கு அழைத்துச்செல்கின்றாயே...?

நீ ஒரு தந்தை மட்டுமல்ல....
தாயுமானவன்...


நீயும் எனக்கொரு அம்மாவே...!

அன்புடன்
ஏழேழு ஜென்மத்திற்கும் நீயே என் கணவனாக வரவிரும்பும் உன் அன்பு மனைவி

No comments: