Friday, October 17, 2008

முயற்சிகளுக்கப்பால்......

முயற்சிகளுக்கப்பால்......

முயற்சிகள் தோற்று
ஆழ்கடலில்
அமிழ்ந்த நொடியில்
அலையொன்று
கரையை நோக்கிச் செலுத்தியது.....

Thursday, July 10, 2008

அமைதியான கடல்...

அமைதியான கடல்

ஆர்ப்பரித்த கடல்
அமைதியாகி
அடக்கங்களின்
சலனங்கள்
நிர்ச்சலனங்களாகின்றன....

Tuesday, July 8, 2008

திருவள்ளுவர்
திருக்குறளில்
பரீட்சை எழுதப் போனார்.
பாவம் ஃபெயிலானார்...
ஏனெனில்-
அவர் படிக்கவில்லை
கோனார்.

---- இது என் நண்பர் பாலாஜி கிருஷ்ணகுமார் தமுஎச கலைஇலக்கிய நிகழ்ச்சியில் சொன்னது.
முதியோர் இல்லம்...

முதியோர் இல்லம் ஒழிப்போம்....
மேடையில் வீர முழக்கம்
அன்னையிடம்
ஆசி வாங்க் விரைந்தான்
முதியோர் இல்லத்திற்கு....
லேட்டஸ்ட் ஃபாஷன்....

ஏழை
கந்தல் துணி
அணிந்தால்....
பாவம்
அவன் ஒரு ஏழை....

அதையே
பணக்காரன்
அணிந்து மினுக்கிட்டால்
அதுதான்
லேட்டஸ்ட் ஃபேஷன்....

மழை

ஏழைகளின்
ஷவர்பாத்.

Saturday, July 5, 2008

உயரம்....

கவிதை - 112



நம்பிக்கை இரண்டாம் ஆண்டு கவிதைப்போட்டி - 2007 ஆறுதல் பரிசு பெற்ற கவிதை....

உயரம்.............. ரிஷி ரவீந்திரன்

அடிப்பெண்ணே … .

நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே.....!



உன் இதய நிலவில்

முதன் முதலாய் -

நான் காலடி எடுத்து வைத்ததால்

நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே...!



நீ -

பூ வாக இருக்க வேண்டிய நேரத்தில்

காயாக இருக்க வேண்டிய கணத்தில்

கனியாக இருக்க வேண்டிய நேரத்தில்

கனியவில்லை...



ஏனிந்த மெளனம்... ?

உன் மெளனத்தைக் கண்டு

நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

அழகான பெண்ணை

என்னவளை

இப்படி ஊமையாகப்

படைத்துவிட்டானே என்று...!



ஆனால் நீ-

அன்றொரு நாள்

கோடி வீட்டுக் குழந்தையிடம்

கொஞ்சியதைப் பார்த்திருக்கிறேன்....



மெளனத்தாலேயே நீ

என்னைக் கொல்கிறாய்....



நம் நாட்டில் இயேசு மட்டுமா

உயிர்த்தெழுகிறார்... ?

இறந்துபோன எத்தனையோ பேர்

உயிர்த்தெழுகின்றனர்-

ஓட்டுப்போட...!

நானும் என்றாவதொரு நாள்

இறந்துவிடுவேன்...

மீண்டும்

உயிர்த்தெழுவேன்-

உன் இதயத்தில்

அன்பு என்ற என் ஓட்டைப் போட....!

அப்பொழுது-

உன் இதயத்தினாழம் வரை

அன்பால் சாலை அமைப்பேன்.



நம்மிருவருக்குமிடையே

இருக்கும் காதலின் ஆழம்

வைரமுத்துவின் வரிகளில்

வானம் தொட்டுவிடும் தூரம்தான்....





என்

புதுப் பேனா

பிரசவிக்கும் முதல் வார்த்தை

உன் பெயரைத்தானே.... ?



பிள்ளையார் சுழிக்குப் பதிலாக

உன் பெயரைத்தானே சுழிக்கிறது... ?



அடிப் பெண்ணே

உன் பெயரை

ஒரு காகிதத்தில் எழுதியிருந்தால்

அழிப்பான் வைத்து அழித்திருப்பேன்.

என் கையில் பச்சைக் குத்தியிருந்தால்

தோலை அறுத்தெறிந்திருப்பேன்..

என் இதயத்திலல்லவா

எழுதியிருக்கிறாய்... ?



காவல் நிலை யம்

காணாமல் போனதைக்

கண்டுபிடித்துக் கொடுத்து உதவுமாமே.... ?



என் இதயம்

காணாமல் போனது...

புகார் கொடுத்தும்

ஏன் நடவடிக்கை இல்லை... ?



எனக்குத் தெரியும் நீ -

என்னைக் காதலிக்கிறாய்.





அன்றொரு நாள்

நீ கோலம் போடுவதை

ரசிப்பதில் லயித்திருந்தேன்....



உன்னை நோக்கி

வரும்பொழுது காலில் குத்திய

கல்லைப் பார்த்து

" ஆ... " என்றாயே...?



காலில் முள் குத்தினால்

கண்ணில் நீர் வருவதென்ன மாயம்... ?



நீ சுவாசித்து விடும்

மூச்சுக்காற்றைத்தானே

நானும் சுவாசிக்கிறேன்... ?

நீ ஒலிபரப்பும்

எண்ண கீதங்களைத்தானே

என் ஜீவ ரேடியோ

பண்பிரக்கம் செய்கிறது.... ?

உன் காலடிகளைப்

பின்பற்றித்தானே

என் காலடிகளும் தொடர்கின்றன... ?



நான் ஒரு நாத்திகன்...



இறையருள்

மிருகத்தையும் மனிதமாக்கிடுமாம்.

உன்னைக் காதலித்தபின்னரே

என்னுள்-

மனிதம் பிறந்தது...!



நம் ஐஐடியில்

நம் வகுப்புத் தோழிகளுடன் பேசியபொழுது

100 டிகிரி செல்சியஸாய்

பொரிந்தாயே.... ?



உனக்கு எம்.ஐ.டி ல் ஆராய்ச்சிமேற்படிப்பிற்கு

தேர்ந்தெடுக்கப்பட்டதை

என்னிடம் மட்டும் தானே

நம் வகுப்பில்

முதன் முதலில் சொன்னாய்..... ?



பிரிவு உபச்சார விழாவில்

கரும்பலகையில்

ட்யூப் லைட் வரைந்து அருகே

என் பெயர் எழுதியிருந்தாயே... ?



இன்று நாம்

காந்தத்தின் இரு

துருவங்களாக....!.



என்னிடம் கிரீன் கார்டு இல்லைதான்

நான் மஸ்சாசூட்டில்

ஆராய்ச்சி பண்ணவில்லைதான்...

ஆனாலும் பெண்ணே

நான் உன்னிடம் வைத்திருப்பதோ

சத்தியமான காதல் .....

சத்தியம் என்றும் தோற்பதில்லை....



இதோ இந்த நொடி கூட

என் இதயம்

உன் பெயரைத்தானே ஒலிபரப்புகிறது... ?



உண்மையான காதல்

உயர வைக்கும் பெண்ணே....



உருவத்தில் நான் -

உயராமலிருக்கலாம்...

எண்ணங்களில் நான்

உயர்கிறேன் பெண்ணே....

என்னை

உயர்த்தியது நீ தானே.... ?

_____________

பின்னோட்டங்கள்

உயரம்

மிக அருமையான கவிதை தன் காதலை மிகவும்

மனதைத் தொடும்படி சித்தரிதிருக்கிறார் முதல் வரியே

க்லக்கி விட்டார் " உன் இதய நிலவில்முதன் முதலாய்

நான் காலடி எடுத்து வைத்ததால்",,,,,,

எல்லா இடமும் எப்போழுதும் நடக்கும் சம்பவத்தை
வைத்து அருமையாகப் படைத்திருக்கிறார் பத்து மார்க்கே கொடுக்கலாம் ஆனால் முழு மார்க் கொடுக்கலாமோ என்று தெரியவில்லை ஆகையால்

உண்மையான காதல்

உயர வைக்கும் பெண்ணே....



உருவத்தில் நான் -

உயராமலிருக்கலாம்...

எண்ணங்களில் நான்

உயர்கிறேன் பெண்ணே....

என்னை

உயர்த்தியது நீ தானே.... ?



நச்சென்ற கிளைமேக்ஸ்



கவிதையில் பின்னூட்டம் தர அதிகம் எதுவும் இல்லை. எல்லா காதல் கவிஞர்களும் புலம்பும் அதே புலம்பலே.

'உயரம் ' என்பதாலா கவிதை வஞ்சனையின்றி வளர்ந்து நிற்கின்றது!

கெஞ்சிக்கொண்டே இருந்தால் எப்படி ?!! நான் என்னவெல்லாம் காதலுக்கு செய்தேன் என்று பட்டியல் போடக்கூடாதாக்கும்!!.....ஒவ்வொரு கணமும் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணவைக்கவேண்டும் அவளை/னை!! அதுதானே காதல்......



உயரம் காதல்!! சிகரம் தொட வாழ்த்துக்கள்

உருவத்தில் இவர் உயராமல் இருக்கலாம்.. ஆனால் இவர் கதையோ மலை போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது....

ஒருதலைக்காதலோ? வெளிநாடு போனதும் மறந்தால் அப்புறம் என்ன அது காதல் ? அந்தஸ்தைப் பார்த்துத் தான் வருமா ? புரியலியே ?

பெண் அமைதி காத்த‌தால் அவளை ஊமையாய் படைத்தானோ அந்த பிரம்மன் என கோபத்திற்குப் பதில் வியப்பு எட்டிப்பார்க்கிறது இக்கவிதையில்..

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ரகம் நம் கவிஞர்..

காதல் ஒலிபரப்பிற்கான வானொலி தயாராகிக் கொண்டிருக்கிறது கவிஞரிடம்..

ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்..ந‌ம் க‌விஞ‌ருக்கு அப்பெண் இங்கே காத‌லியாக..

வானம் தொட்டுவிடும் தொலைவில் , ஆனால் காந்தத்தின் இரு துருவமாய் உள்ள இக்காதல் விரைவில் வாழ்வைத் தொட வாழ்த்துக்கள்..

கொஞ்சம் மொழிக்கலப்பு இன்றி இருந்தால் நலமாகுமே என்பது என் தாழ்மையானக் கருத்து..

நன்றி
- Show quoted text -



--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---

கண்ணில் தெரியும் கதைகள்...


கண்ணில் தெரியும் கதைகள்....


கண்மூடித்
தவத்திலிருந்தேன்.
பட்டாம்பூச்சி
என் கையிலமர்ந்தது.
தவம் கலைத்து
ரசித்துப்பார்த்தேன்.
அதனை அன்பால் தடவிட
அருகே கரம் நகர்த்தினேன்
பறந்துபோனது
மனம்
கனத்துப்போனது...!

சலனம்

சலனம்...

அமைதியான குளம்...

கல்லெறிந்தவர்கள் அநேகம்

சலனம் ஏற்பட்டாலும்

சட்டென அமைதியாகி

உள்வாங்கப்பட்ட கற்கள்

நிர்ச்சலனமாகின்றன.

--------------------------

உள்வாங்கப்பட்ட கற்கள்

நிர்ச்சலனமாகின்றன.
இந்த இரு வரிகள் ஏதேதோ சொல்கின்றன.... ரிஷி அய்யா நீங்க பிஹெச்டி வாங்கியாச்சு கவிதையில் :)

மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்.
- Show quoted text -


2008/7/8 Raveendran Krishnasamy :



2008/7/7 Shylaja N :


வரவர ரிஷியெல்லாம் காதல் பேசறங்கப்பா:):)


>>>>>> ரிஷியா ஆகுறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் ஷைலஜாக்கா...?
:):):):) எஸ்கேப்....



2008/7/8, Raveendran Krishnasamy :



2008/7/7 விஜி சுதன் :

என்னிடம் கிரீன் கார்டு இல்லைதான்

நான் மஸ்சாசூட்டில்

ஆராய்ச்சி பண்ணவில்லைதான்... <<<


நீங்க உயரம் ஆகறீங்க மகிழ்ச்சி அதுக்காக பொண்ணுங்களை இப்படி மட்டமாக்கப் படாது அண்ணே :))))))

ஆனாலும் பெண்ணே

நான் உன்னிடம் வைத்திருப்பதோ

சத்தியமான காதல் .....

சத்தியம் என்றும் தோற்பதில்லை....



இதோ இந்த நொடி கூட

என் இதயம்

உன் பெயரைத்தானே ஒலிபரப்புகிறது... ?



உண்மையான காதல்

உயர வைக்கும் பெண்ணே....



உருவத்தில் நான் -

உயராமலிருக்கலாம்...

எண்ணங்களில் நான்

உயர்கிறேன் பெண்ணே....

என்னை

உயர்த்தியது நீ தானே.... ?

பெண்ணிடம் பேசுவது போல் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் வழிகிறது :))


>>>>>ஆஹா..... வந்துட்டாங்கய்யா... வந்துட்டாய்ங்க....

:):):)

அன்புள்ள சகோ விஜி,

இது நம்பிக்கை கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. காதல் என்ற கருத்தில் கவிதை இருக்கவேண்டும் என்று போட்டி விதி வகுக்கப்பட்டிருந்தது.

நமக்கும் அதற்கும் காத தூரமாச்சே...? அப்றம் மண்டையக் குழப்பி ஒரே யோசனை பண்ணி எழுதினது. அப்போ நிலாவோட காதல் கவிதைகள் மனசை அள்ளும்.

இந்தக் கவிதையில் வருவது போல் நான் ஐஐடியில் படிக்கவில்லை. ஆனால் அதேபோல் தரம் வாய்ந்த ஒரு இண்ஸ்டிடியூட்டில் படித்திருந்தேன். அப்பொழுதெல்லாம் கடைசி பெஞ்ச்தான். ஐஐடி புரபசர்கள்(ஐஐடி புரபசர்கள் எங்களுக்கும் எங்களது புரபசர்கள் ஐஐடிகளுக்கும் பாடங்கள் எடுப்பர்...) அங்கே பாடங்கள் நடத்திக்கொண்டிருக்க, நமக்குத்தான் மரமண்டையாச்சே... ஊஹூம் பாடங்கள் மண்டையில் ஏறாமல் கடைசி பெஞ்ச்சில் பரிவாரங்களுடன்.

(((எப்படியோ டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் மட்டும் கொஞ்சம் சொல்லிக்கறாப்ல மார்க்ஸ் வரும். அப்றம் இந்த் Systems Simulationல் Institute First வர முடிஞ்சது அவ்ளோதான். System Analysis and Designலோ அவ்ளோ ஆர்வமா இருந்தும் கடைசில 53 மார்க் எடுத்து ஜஸ்ட் பாஸ்தான் கெடச்சது. Programming ல Logic வேணுமா... நமக்குத்தான் அது இல்லையே.... அதுலயும் ஜஸ்ட் பாஸ்தான்.
Structure and Data Manipulationல அந்த ஐஐடி வாத்தியார் சொல்றதும் புரியாது நாங்க என்ன படிக்றோம்னு எங்களுக்கும் புரியாது.... கடைசில எப்பவும் போல் பார்டர்தான். ம்ம்ம்... நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்ன்றது சரிதான்னு அப்ப புரிஞ்சது... சரஸ்வதிக்கும் உனக்கும் ஜன்ம பகைன்னு தவமும் அனுபவங்களும்ன்ற தொடர்ல வருமே.... அதே.... அதே... நிஜம்...! இப்பவும் அதே மாதிரிதான் மக்குப் பையனாத்தான் இன்னமும் இருக்கேன்.... !!! )))

அப்பல்லாம் பசங்க இப்டித்தான் ஏத்திவிடுவாங்க. எங்க வகுப்பில், 'டேய்... அந்தப் பெண் உன்னத் தாண்டா பாக்றா.... அப்டீன்னு...' ஒருத்தன உசுப்பி விட்டாங்க. ஆனா அவன் அதை நம்பவேயில்லை. தெனமும் எங்க பசங்க அவன ப்ரைய்ன் வாஷ் பண்ணப் பண்ண அவன் நெஜமாவே ரொம்ப அப்பாவியா நம்பினான்.

ஆனா உண்மையில் அப்டி எதுவும் இல்லை.

அந்தப் பெண்ணோ என்னிடம் மட்டும் கொஞ்சம் ஃப்ரீயா பேசுவாங்க. அவங்க அப்ப அமெரிக்காவுல மேலே பி.ஹெச்.டி பண்ணப் போற விஷயம் எங்கிட்ட மட்டும் சொன்னாங்க.

நானும் என்னோட அமெரிக்கா போற எண்ணம் (அப்பதான் கம்ப்யூட்டர்கள் டாஸ்சிலிருந்து விண்டோஸுக்கு வர்ர காலம் நாங்க 1994- 1995 Passed out Batch )
குறிக்கோளும் சொல்லிட்டு, "யார்ட்டயும் சொல்லவேணாம்"னு சொன்னா... அவங்களோ அட்சரம் பிசகாம எல்லார்ட்டயும் சொல்லிட்டாங்க.

அப்றம் அதுக்கப்றம் எங்க க்ளாஸ்மேட்ஸ் எல்லோருமே அப்பவே இங்க வந்து செட்டிலாகிட்டாங்க. நாந்தான் ரொம்ப லேட்... எல்லாத்லயுமேதான்...!

அரைக்ளாஸ்லருந்து கடைசியா படிச்ச கம்ப்யூட்டர் வரைக்கும் எல்லாமே கோ-எட் தான். ஆனா காதல் அது இதுன்னு எதுவுமே வர்லே... அதுல் விழக்கூடாதுன்றதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். ஏன்னா என்னோட க்ளாஸ்மேட்ஸோட நிலைமைகளைக் கண்கூடா பாத்திருக்கேன்.... ஒவ்வொரு வகுப்பிலும் யாராவது ஒரு மாணவனும் மாணவியும் ரொம்ப ரகசியமான லவ் இருக்கும்.

அந்தப் பையனோட நிலையிலிருந்து கிறுக்கிப் பாத்தேன். அது க்ளிக் ஆய்டிச்சி.
எங்க கம்ப்யூட்டர் கல்விய மையமா வச்சி ;மெஷின்'னு ஒரு கதை எழுதினேன். முழுக்க முழுக்க காதல்தான். அப்ப அது ரொம்ப பரவலா பேசப்பட்டது.




--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"









--
அன்புடன்
சக பயணி
ரவீந்திரன்
www.rishiraveendran.tk
www.rishiraveendran.com


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com

மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

என் வான் உன்னகத்தே....

என் வான் உன்னகத்தே...

என் வான்
பரந்து விரிந்த வான்
அனைத்தையும்
தன்னகத்தே கொண்டுள்ளது.
அது இருப்பதோ
உன்னகத்தில்......

பார்க்காமலே....

பார்க்காமலேயே...

எதிரெதிர் தண்டவாளங்கள்
பார்க்காமலேயே
காலங்கள் கரைகின்றன.

இணைதல்...

இணைவு்....

அருகருகே இருந்தும்
இணையமுடியாமல் போனதே
இரயில் தண்டவாளங்களாய்....

என் வானிலே...

என் வானிலே...

என் வான்
பரந்து விரிந்த வான்
அனைத்தையும் அரவணைக்கின்றது
நீ உட்பட....!


விஜி சுதன்
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Fri, Jul 4, 2008 at 12:42 PM
subject [muththamiz] Re: ரிஷியின் கவிதைகள்.
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com

hide details Jul 4 (1 day ago)


Reply




On 7/4/08, Raveendran Krishnasamy wrote:

என் வான்
பரந்து விரிந்த வான்
அனைத்தையும் அரவணைக்கின்றது
நீ உட்பட....!<<<


நான்கே வரிகள் சொல்வதோ ஆழம் பொதிந்த கருத்துக்கள்..

நறுக்கென்றிருக்கிறது சுவைக்கிறது நம்பிக்கை கொடுக்கிறது...